28.2.12

ஜெனீவாவின் தீர்ப்பை கண்டித்து SLTJயின் ஆர்ப்பாட்டம்

“அந்நிய சக்திகள் இலங்கையின் இறைமையை தட்டிப்பறிக்க இடமளியோம்!”
களத்தில் இறங்கியது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணை குழுவின் பரிந்துரையை இலங்கை அரசு நடைமுறைப்பபடுத்தத் தவறிவிட்டது என்றும் கூறி அமெரிக்க தலைமையிலான மேற்குலக ஆதிக்கவாதிகள் நேற்று ஜெனீவாவில் வைத்து இலங்கை அரசுக்கெதிராய் தீர்மானங்கள் நிறைவேற்றக் காத்திருந்தன.

Read more...

21.2.12

கொடூரமாக கொல்லப்பட்ட சஹாபாக்கள்

மலேசியாவிலிருந்து யாஸர் அரபாத் D.I.Sc

உறுதியாக இணைக்கப்பட்ட கட்டடம் போன்று அணிவகுத்து தன் பாதையில் போரிடுவோரை அல்லாஹ் விரும்புகிறான்.    அல் குர்ஆன் 61:4

என்ற வசனத்திற்கு தகுதியானவர்களாக பல போர்க்களங்களை சந்தித்து  சஹாபாக்கள் தியாகம் செய்ததை வரலாறுகள் மூலம் அறிந்திருக்கிறோம். அந்த போர்க்களங்களில் சஹாபாக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் எப்படியெல்லாம் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்பதை அறியாமல் இருக்கிறோம். அவர்கள் செய்த தியாகத்தின் மூலம் நாமும் மார்கத்திற்காக தியாகம் செய்ய வேண்டும் என்கிற படிப்பினை பெறுவதற்காக கொடூரமாக கொல்லப்பட்ட சஹாபாக்கள் என்ற தலைப்பின் கீழ் தகவல்களை தருகிறோம்.

அடையாளம் தெரியாமல் கொல்லப்பட்ட அனஸ் இப்னு நள்ர் (ரலி ):
 அனஸ் (ர-) அவர்கள் கூறியதாவது:
என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் நள்ர் (ர-) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்று விட்டார். அவர் (திரும்பி வந்தவுடன்) ""அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணை வைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை;

Read more...

14.2.12

கிரிஸ்தவர்கள் விவாதத்திலிருந்து பின்வாங்கி ஓட்டம்

(ஆன்லைன் பீஜே வில் வெளியான இவ்வாக்கத்தை வாசகர் நலம் கருதி 

எமது தளத்திலும் வெளியிடுகிறோம் )

இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.

அல்குர்ஆன் 74:49,50,51
Download Video
என்ற இறைவசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் முதல் தலைப்பில் விவாதம் செய்த கிறிஸ்தவ அறிஞர்கள், இரண்டாம் தலைப்பில் விவாதத்திற்கு வராமல் ஓட்டமெடுத்த நிகழ்வு கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜனவரி 21 மற்றும் 22 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் சென்னை தி.நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும், ஜெர்ரி தாமஸ் குழுவினருக்கும் இடையே அனல் பறந்த விவாதம் நடைபெற்றதை சென்ற வார உணர்வு இதழில் நாம் எழுதியிருந்தோம்.
இது ஆன்லைன் பீஜே டாட் காம் இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. உடனடியாக அவை குறுந்தகடுகளாகவும் வெளியிடப்பட்டன.

Read more...

1.2.12

நபிகள் நாயகத்தை புகழ்வது எவ்வாறு?

பியுல் அவ்வல் மாதம் வந்துவிட்டது. மீலாது விழா கொண்டாடலாமா? மவ்லூது ஓதி விருந்து போடலாமா? என்ற கேள்விக்கு தெளிவான விடை காணாத முஸ்லிம்கள் மத்தியில் சர்ச்சைகளும் தோன்றி விடுவது வழமையாகி விட்டது. எங்கள் தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்களைப் புகழ்வதில் என்ன தவறு இருக்கிறது? என்று சாக்குப் போக்குக் கூறி மீலாத் கொண்டாடும் முஸ்லிம்கள் பலர். இல்லை... இந்த மீலாதும் மவ்லூதும் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டது. எனவே, இதனைக் கொண்டாடக் கூடாது என்று சிலர். இவர்களின் குழப்ப நிலையை தெளிவு படுத்த வேண்டிய கடமை தம்வசம் சமத்தப்பட்டிருப்பினும், எரிகின்ற வீட்டில் பிடுங்குவதே இலாபம் என்ற தோரணையில் சமூக சர்ச்சை என்ற தீயில் குளிர் காயும் ஆலிம்கள் பலர். உண்மையைச் சொன்னால் ஒற்றுமை குழையும் என்று வெற்றுச் சித்தாந்தம் பேசி மார்க்கத்தை தாரைவார்க்கும் கொள்கைக் கோமாலிகள் இன்னுமொரு புறம். இந்த காலகட்டத்தில் இப்பிரச்சினையை அல் குர்ஆன், நபி வழி கொண்டு அலசி, சமூகத்திற்கு உண்மை நிலையை எடுத்துரைப்பது எமது கடமை எனக் கருதியதன் விளைவே இந்த ஆக்கம் வெளியிடப்படுகிறது.

Read more...

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP