20.1.12

மறப்போம்! மன்னிப்போம்!

நான் நபி (ஸல்) அவர்கடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ர) அவர்கள் தமது முழங்கால் வெயே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்த படி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், உங்கள் தோழர் வழக்காட வந்து விட்டார் என்று சொன் னார்கள். அபூபக்ர் (ர) அவர்கள் (நபி -ஸல்- அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, அல்லாஹ் வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்கடம் வந்தேன் என்று சொன்னார்கள்.
உடனே, நபி (ஸல்) அவர்கள், அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் (ர) அவர்கள் (அபூபக்ர் -ர- அவர்களை மன்னிக்க மறுத்து விட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ர) அவர்கன் வீட்டிற்குச் சென்று, அங்கே அபூபக்ர் (ர) அவர்கள் இருக்கிறார்களா? என்று கேட்க, வீட்டார் இல்லை என்று பதிலத்தார்கள்.
ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்கடம் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூபக்ர் (ர) அவர்கள் பயந்து போய் தம் முழங்கால்கன் மீது மண்டியிட்டு அமர்ந்து, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தான் (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன் என்று இருமுறை கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், (மக்களே!) அல்லாஹ் என்னை உங்கடம் அனுப்பினான். பொய் சொல்கிறீர் என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் அவர்களோ, நீங்கள் உண்மையே சொன்னீர்கள் என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா? என்று இருமுறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ர) அவர்கள் மன வேதனைக்கு உள்ளாக்கப்படவில்லை. அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)
நூல்: புகாரி 3661
இருவருக்கு மத்தியில் சண்டை ஏற்படும் போது அது ஆரம்பத்தில் சிறியதாக இருந்தாலும் நாளடைவில் பெரும் பூகம்பமாக ஏற்பட்டு இருவருக்குமிடையில் நிரந்தரப் பிரிவு ஏற்பட்டு விடுகிறது. இதற்குக் காரணம் நம்மிடம் விட்டுக் கொடுக்கும் எண்ணம் இருப்பதில்லை; தவறை மன்னிக்கும் மனப் பக்குவமும் வருவதில்லை.
அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையில் சண்டை வந்தது. இதில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் தவறிழைத்துள்ளார்கள். எனவே தவறுக்காக உமர் (ரலி) அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள். ஆனால் கோபத்தின் உச்சத்தில் இருந்த உமர் (ரலி) அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டார்கள். இதனால் மன வேதனை அடைந்த அபூபக்ர் (ரலி) அவர்கள், நபிகளாரிடம் சென்று விவரத்தைத் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் கோபம் தணிந்த உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் மன்னிப்புக் கேட்டும் மன்னிக்கத் தவறியது மாபெரும் தவறு என்பதை உணர்ந்து அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்திக்க வீட்டிற்குச் சென்ற போது அவர்களைக் காணாததால் நபிகளாரின் அவைக்குச் சென்றார்கள். உமர் (ரலி) அவர்களைக் கண்ட நபிகளாருக்கு கோபம் ஏற்பட்டது. இஸ்லாத்திற்காக பெரும் தியாகத்தைச் செய்த அபூபக்ரையே மன்னிக்க மறுப்பதா? என்று கோபப்பட்டார்கள். அவர்களின் முகத்தில் கோபத்தின் அறிகுறியைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், உமர் மீது எந்தத் தவறும் இல்லை. அவர் மீது கோபப்படாதீர்கள் என்று நபிகளாரை சமாதானப்படுத்தினார்கள்.
மன்னிக்க மறுத்த உமர் (ரலி) அவர்கள் மீது நன்றாக கோபப்படட்டும், நன்றாகத் திட்டட்டும் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் இருந்திருக்கலாம். ஆனால் நற்பண்புகளை அதிகம் கொண்டிருந்த அபூபக்ர் (ரலி) அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. நான் தான் தவறு செய்தேன் என்று கூறி, உமர் (ரலி) அவர்கள் மீது நபிகளாருக்கு இருந்த கோபத்தைத் தணித்தார்கள். இதனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் மீது அளவு கடந்த அன்பை உமர் (ரலி) கொண்டிருந்தார்கள். நபிகளாருக்குப் பிறகு யாரை தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை வரும் போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முதலில் உமரை முன் மொழிந்தார்கள். ஆனால் நபிகளாருக்குப் பிறகு மிகச் சிறந்தவர் அபூபக்ர் (ரலி) அவர்களே என்று கூறி முதன் முதலில் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்தவர்கள் உமர் (ரலி) அவர்கள் தான்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், நீங்கள் உமர் பின் கத்தாப், அல்லது அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள் என்று சொன்னார்கள். அப்போது உமர் (ர) அவர்கள், இல்லை; நாங்கள் உங்கடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்கல் சிறந்தவர்; எங்கடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள் என்று சொல்விட்டு, அவர்களுடைய கரத்தைப் பிடித்து அவர்கடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூபக்ர் (ர) அவர்கடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.
நூல்: புகாரி 3668
மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிக்கும் மனப் பக்குவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தன் பெருந்தன்மையால் தவறு செய்பவர்களைத் திருத்த வேண்டும். இருவருக்கும் மத்தியில் மனக் கசப்புகளை உருவாக்காமல் அதை நீக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். ஆனால் இன்று ஒருவர் ஸலாம் கூறினால், அவர் தமக்குப் பிடிக்காதவராக இருந்தால் அந்த ஸலாத்திற்குக் கூட பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விடுபவர்கள் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவரும் நடந்து கொண்ட முறையை எண்ணிப் பார்க்கட்டும். மேலும் பின்வரும் நபிமொழியையும் சிந்திக்கட்டும்.
நீங்கள் இறை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாத வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறை நம்பிக்கையாளர்களாக ஆக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (93)

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP