27.12.11

வரலாற்றில் இடம் பிடித்த SLTJ யின் முதலாவது பொதுக்குழு – நாடு முழுவதிலிருந்தும் நிர்வாகிகள் பங்கேற்பு.


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் கடந்த 24-12-2011 சனிக்கிழமை அன்று கொழும்பு வாழைத் தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.
இலங்கை முழுவதிலிருந்து கிளை நிர்வாகிகள் இப் பொதுக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.
தவ்ஹீதின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்ட தலைவரின் உரை.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஜமாத்தின் தேசிய தலைவர் ஆர்.எம். ரியால் அவர்களின் தலைமை உரை தவ்ஹீத் ஜமாத்தின் தஃவா முன்னெடுப்புகள் சமுதாய செயல்பாடுகள் போன்றவற்றை ஞாபகப்படுத்தியதுடன் தவ்ஹீத் பிரச்சாரத்தின் முக்கியத்துவமும் உணர்த்தப்பட்டதாக அமைந்தது.
ஜமாத்தின் கட்டுக் கோப்பு சிதையாமல் சீரான முறையில் ஜமாத்தை முன்னெடுக்க தவ்ஹீத் என்ற அடிப்படைத் தத்துவம்  விஷயத்தில் நாம் அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி கிளை நிர்வாகத்திற்கு தலைவர் உரை மூலம் உணர்த்தப்பட்டது.
வரலாற்றில் ஓர் ஏடாக மாறிய வருடாந்த அறிக்கையும், வரவு, செலவு கணக்கு விபரமும்.
இலங்கை வரலாற்றில் எத்தனையோ இயக்கங்களை இலங்கை மக்கள் கண்டுள்ளார்கள். அதிலும் தவ்ஹீத் வாதிகளுக்கு மத்தியில் பல இயக்கங்கள் தோன்றியுள்ளன. வெளிநாட்டு நிதிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நிதி நிருவனங்கள் நிறையவே இலங்கை மக்களுக்கு பழக்கப்பட்டவர்கள். இந்நிலையில் வெளிநாட்டு நிதி இன்றி பொது மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் பணத்தைக் கொண்டு இஸ்லாமியப் பிரச்சாரம் மற்றும் சமுதாயப் பணிகளை முன்னெடுத்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத், பொதுக் குழுக் கூட்டத்தில் தனது வருடாந்த அறிக்கையை பொது மக்களுக்கு அறிவித்தது.
ஒரு வருடத்தின் வரவு மற்றும் செலவு விபரத்தையும் தனித் தனியாக பிரித்து காட்டி வெளியிட்டது.
வரவு மற்றும் செலவு விபரம் தொடர்பாக கேள்விகள் கேட்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு கேள்வி கேட்ட சகோதரர்களுக்கு தெளிவான பதில்கள் கொடுக்கப்பட்டன.
இலங்கையில் ஓர் இஸ்லாமிய இயக்கம் தனது பொதுக் குழுவை கூட்டி கணக்கு விபரங்களை தெரிவித்து அதில் கேள்வி பதிலுக்கும் இடமளித்தது என்பது வரலாற்றில் ஓர் ஏடாகும். எவ்வளவு வரவு எவ்வளவு செலவு என்பதைக் கேட்டாலே வாய் திறக்காக பல இயக்கங்களுக்கு மத்தியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பொதுக் குழு ஓர் முன்மாதிரியை காட்டிக் கொடுத்தது. அல்ஹம்துலில்லாஹ்.


சபையோரினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட ஜமாத்தின் சட்ட விதி.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாக சட்ட விதி (பைலா) பற்றிய விவாதம் சபையில் முன்வைக்கப்பட்டது. ஜமாத்தின் தலைமை நிர்வாகம் முதல் கிளை நிர்வாகம் வரை எப்படி செயல்பட வேண்டும். அதன் அங்கத்தவர்களின் எப்படிப் பட்டவர்களாக இருக்க வேண்டும். ஜமாத்தின் அரசியல் நிலைபாடுகள் என்ன என்பது போன்ற விடயங்கள் குறித்து அலசி ஆராய்ந்து தொகுக்கப்பட்ட சட்ட விதியை (பைலா) பொதுச் செயலாளர் சகோதரர் அப்து ராசிக் அவர்கள் சபையினர் மத்தியில் வாசித்துக் காட்டி விளக்கமளித்தார்கள்.
சட்ட விதி தொடர்பாக கிளை நிர்வாகிகளுக்கு இருந்த சந்தேகங்களை தெரிவித்த நேரம் அதற்கு தெளிவான பதில்களும் அப்போதே வழங்கப்பட்டது. சுமார் இரண்டரை மணி நேரம் பைலா பற்றி விவாதிக்கப்பட்ட பின் கிளை நிர்வாகிகள் அனைவரின் ஒப்புதல் ஓட்டெடுப்பின் பின் ஜமாத்தின் சட்ட விதி (பைலா) அமுல்படுத்தப் படுவதாக அறிவிக்கப்பட்டது.

நிர்வாக மாற்றமும், பொதுக் குழுவின் ஒப்புதலும்.
தேசிய நிர்வாதக்தின் நிர்வாகக் குழுவில் சில மாற்றங்கள் செய்வதாகக் கூறி மாற்றங்கள் பற்றிய தெளிவுகளை பொதுச் செயலாளர் வழங்கியதன் பின் நிர்வாக மாற்றம் தொடர்பில் பொதுக் குழு உருப்பினர்களிடம் ஒப்புதலும் பெறப்பட்டது.
ஜமாத்தின் துணை தலைவராக இருந்த சகோதரர் ரகீப் அவர்கள் தனது வேலைப்பழு காரணமாக துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் தான் ஜமாத்தின் தேசிய நிர்வாக உருப்பினராக  இருப்பதாகவும், ஜமாத்தின் பொருளாளராக இருந்த சகோதரர் கமர்தீன் அவர்கள் தனது வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் பொருளாலர் பதவியை மாற்றிக் கொள்ள விரும்புவதாகவும் அறிவித்த நிலையில் இருவரின் பொருப்புக்களும் மாற்றப்பட்டது.
ஜமாத்தின் தேசிய பொருளாராக இது வரை காலமும் ஜமாத்தின் வசூலிப்பாளராக கடமையாற்றிய சகோதரர் ஹஸன் நானா அவர்களும், தேசிய துணைத் தலைவராக சகோததரர் கமர்தீன் அவர்களும், தேசிய நிர்வாக உருப்பினராக சகோதரர் ரகீப் அவர்களும் அறிவிக்கப்பட்டு பொதுக் குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டது.
எதிர்கால செயல் திட்டங்களும், பணிகளும்.
ஜமாத்தின் எதிர்கால செயல்திட்டங்களை தஃவா பணி, சமுதாயப் பணி என்று இரண்டாகப் பிரித்து அறிவிக்கப்பட்டது. செயல்திட்டங்களை ஜமாத்தின் தேசிய நிர்வாக உருப்பினர் சகோதரர் ரகீப் அவர்கள் அறிவித்தார்கள்.
கிளை நிர்வாகத்தின் செயல்பாடுகள் பற்றி கிளை நிர்வாகிகள்…….
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் கிளை நிர்வாகிகள் தங்கள் கிளைகள் செயல்படும் விதம், செய்யும் சேவைகள், சந்திக்கும் பிரச்சினைகள் போன்றவற்றை பொதுக் குழுவில் தெரிவித்தார்கள்.
இஸ்லாமியப் பிரச்சாரக் களத்தில் தாங்கள் சந்திக்கும் சிக்கள்களை ஒருவர் பின் ஒருவராக சொல்லியது மட்டுமன்றி தங்கள் தஃவா முயற்சிகள் தொடர்பில் மற்றவர்கள் மத்தியில் அவற்றைப் பகிர்ந்து கொண்டமை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைத்தது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், எதிரொலித்த தக்பீர் முகக்கமும்.
பொதுக் குழுவின் இறுதிக் கட்டமாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பொதுக் குழுத் தீர்மானம் வாசிக்கப்பட்டது. ஜமாத்தின் தேசிய நிர்வாகக் குழு உருப்பினரும் “அழைப்பு” மாத இதழின் துணை ஆசிரியருமான சகோதரர் ரஸ்மின் அவர்கள் தீர்மானங்களை வாசிக்க பொதுக் குழு உருப்பினர்கள் தக்பீர் கூறி அவற்றை ஆமோதித்தார்கள்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1.இரண்டு தசாப்த காலம் இலங்கையை ஆற்கொண்டிருந்த யுத்தம் நீங்கி இலங்கை மக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சுபீட்சத்துடனும் வாழும் இந்நேரத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வை பேச்சு வார்த்தை மூலம் பெற்றுக்கொள்வதற்காக முஸ்லீம்கள் தரப்பில் தனிக் குழுவை பேச்சு வார்த்தையில் அரசு இணைத்து முஸ்லீம்களையும் பேச்சு வார்த்தையில் பங்காளர்களாக ஆக்க வேண்டும் என்று இலங்கையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியை இப் பொதுக் குழு வேண்டிக் கொள்கிறது.

2. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆனைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் இவ்வேலையில் அதன் பரிந்துரைகள் அனைத்தும் நடை முறைக்கு கொண்டு வர வேண்டும் என்று இப் பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.

3. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆனைக் குழுவின் பரிந்துரைகளில் முஸ்லீம்கள் சார்பாக குறிப்பிட்டிருக்கும் விடயங்களை நடை முறைப்படுத்தி சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஆளும் அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என இப் பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது.

4. இலங்கையில் ஏகத்துவப் பிரச்சாரம் மற்றும் சமுதாயப் பணிகளை செய்து வரும் தவ்ஹீத் அமைப்புக்களை தீவிர வாத அமைப்புகளாக சித்தரித்துவஹாபிய ஆயுதக் குழுக்கள்இயங்குகின்றன என்று பொய்ப் பிரச்சாரம் செய்து சொற்ப இலாபங்களுக்காக சமுதாயத்தை காட்டிக் கொடுக்க முனையும் அரசியல்வாதிகளையும், குறிப்பாக ஆளுனர் அலவி அவர்கள் இது தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்களையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் இப் பொதுக் குழு வண்மையாகக் கண்டிக்கிறது.
5. யுத்தம் நீங்கி சுதந்திரமான சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்நிலையில் வடகிழக்கில் விடுதலைப் புலிகளினால் வடகிழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களை மீண்டும் அவர்களின் சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்வதற்கும் அவர்களுக்குறிய வாழ்வாதார உதவிகளை செய்து கொடுப்பதற்கும் அரசு இன்னும் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும் என்று இப்பொதுக் குழு வேண்டிக் கொள்வதுடன், குறிப்பாக யாழ்மண்ணில் இருந்து வெளியேற்றப் பட்ட மக்களை மீள் குடியேற்ற வேண்டும் என்றும் இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கிறது.

6. அனைத்து இன மக்களும் சுபீட்சத்துடன் வாழும் இவ்வேலையில் இனங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உண்டாக்கி சகோதரத்துவத்தை கெடுக்க நினைக்கும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அரசு அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் இப்பொதுக் குழு வேண்டிக்கொள்கிறது.

7. முஸ்லீம்கள் தங்கள் சமயக் கடமைகளான தொழுகை, நோன்பு, குர்பான், ஹஜ் போன்றவற்றை நிறை வேற்றுவதற்கு தடையாக இருப்பவர்களை அரசு எச்சரிப்பதுடன், முஸ்லீம்களின் வாழ்வுரிமையை உரிதி செய்யுமாறும் கோரிக்கை விடுக்கிறது.

8. இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் கொச்சைப் படுத்தும் விதமாகவும் பெரும்பான்மை மக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் முகமாகவும் பத்திரிக்கை மற்றும் இணையதளங்கள் வாயிலாக விஷமக் கருத்துக்களைப் பரப்பும் இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளை தடை செய்வதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் படியும் இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.

9.முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் வேண்டுமென்று மூக்கை நுழைத்து மோதல்களுக்கு வழிவகுத்து நிலையான உள்நாட்டு யுத்தத்திற்கு வழி வகுக்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட அதன் நேச நாடுகளின் வக்கிரப் புத்தியை இச் செயற்குழு வண்மையான எதிர்கிறது.

10. ஊடகச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ள இந்நாட்டில் அடிக்கடி ஊடகவியலாளர்கள் காணாமல் போவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்பில் அரசு ஆழ்ந்த அக்கறை செலுத்த வேண்டும் என்று பொதுக் குழு வேண்டிக் கொள்கிறது.

இறுதியாக…….
நன்றியுரையுடன் சபையை முடிக்கும் துஆவை மொழிந்தவர்களாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் முதலாவது தேசிய பொதுக் குழு நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

தலைமை நிர்வாகிகள் அறிமுகம்





















0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP